Police Department News

தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி: மனைவி தீ வைத்து எரித்ததாக வீடியோ வெளியிட்ட வாலிபர்- போலஸ் விசாரணை

தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி: மனைவி தீ வைத்து எரித்ததாக வீடியோ வெளியிட்ட வாலிபர்- போலஸ் விசாரணை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம்(வயது 31). இவரது மனைவி சங்கர ஆவுடையம்மாள். இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

சமீப காலமாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கர ஆவுடையம்மாள் தனது பெற்றோர் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அருணாச்சலம் உடலில் தீக்காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்த தனது மனைவி தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டதாக கூறி உள்ளார். ஆனால் போலீஸ் விசாரணையில் அருணாச்சலம் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. எனினும் மாரி முத்துவின் வாக்கு மூலத்தை அடிப்படையாக கொண்டு அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.