Police Department News

திடீரென குளச்சல் சரகத்திற்கு சென்ற தமிழக காவல் துறை தலைவர் திரு சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் காவல் நிலைய எழுத்தருக்கு பாராட்டு!

திடீரென குளச்சல் சரகத்திற்கு சென்ற தமிழக காவல் துறை தலைவர் திரு சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் காவல் நிலைய எழுத்தருக்கு பாராட்டு!

தமிழக காவல் துறை தலைவர் திரு. சைலேந்திரபாபு அவர்கள் குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட கொல்லங்கோடு, நித்திரவிளை காவல் நிலையத்தில் திடீரென சென்றார்.

அப்போது நிலையத்திற்கு வந்த அவர் புகார்தாரர்கள் வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்து, கோப்புகளை சரியான முறையில் பராமரித்து வரும் நித்திரவிளை காவல் நிலைய எழுத்தர் ரசல் ராஜீவை பாராட்டி வெகுமதி வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து பணியில் இருந்த காவலர்களிடம் குறைகளை கேட்டு அறிந்து காவல் நிலையத்தின் சுற்றுப்புறங்களை எவ்வாறு பராமரிக்கின்றனர் என்பதை பார்வையிட்டார்.

அப்போது காவல் நிலையத்தின் பின்புறம் காலியாக கிடக்கும் இடத்தில் தங்கும் விடுதி அமைக்கலாம் என்ற ஆலோசனையும் நடத்தினார்.

தொடர்ந்து கொலங்கோடு காவல் நிலையம் சென்று காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டு வரவேற்பு புத்தகத்தை ஆய்வு செய்தார்.

அப்போது கோப்புகளை சரியாக பராமரிப்பு செய்ததற்காக கொல்லங்கோடு காவல் நிலைய எழுத்தர் ஜஸ்டின் தேவ அருள்தாஸ்க்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டாலியன் பிரிவையும் ஆய்வு செய்து பட்டாலியன் பிரிவு போலீசாரின் குறைகளையும் கேட்டு அறிந்தார்.

காவல்துறை தலைவருடன் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் சக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்தி உதவி:-
S.ரெங்கராஜ்

Leave a Reply

Your email address will not be published.