Police Department News

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 9-ம் வகுப்பு மாணவி மாயம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 9-ம் வகுப்பு மாணவி மாயம்

பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார். இவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடி எங்கேயும் கிடைக்க வில்லை, மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதேஊரை சேர்ந்த ஏற்கனவே திருமணமான 30 வயதுடைய வாலிபர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக புகாரளித்தார்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவியை தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.