Police Department News

மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி பலி

மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி பலி

மதுரை கே.புதூர் ஈ.பி.காலனியை சேர்ந்தவர் முத்தையா (56). இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்தார். அப்போது தவறுதலாக மின்சார பெட்டியை தொட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் பீட்டர் (30). இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. எனவே அவர் சுயமாக தனக்குத்தானே ஊசி போட்டுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.