Police Department News

பழனி ரவுடி கொலையில் 2 வாலிபர்கள் கைது

பழனி ரவுடி கொலையில் 2 வாலிபர்கள் கைது

பழனி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த கோபால் மகன் வடிவேல் (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களாக பழனியில் தங்கி இருந்தார். நேற்று காலை அடிவாரம் பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் வடிவேல் உயிரிழந்தார்.

இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் அழகாபுரியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் மாரிமுத்து (27), வீரமணி மகன் சுரேஷ் (29) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொலை செய்ததை ஒத்துக் கொண்டனர்.

சுரேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் அடிவாரம் பகுதியில் குதிரை வண்டி ஓட்டி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வடிவேல் இவர்களது நண்பர் ஆவார். இவர்கள் 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அதன்படி கடந்த வாரம் மது குடித்துக் கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நேற்று காலையிலும் அவர்கள் மது குடித்தபோது தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வடிவேல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து மற்றும் சுரேஷ் அவரை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Leave a Reply

Your email address will not be published.