Police Department News

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டம்: உரிமையாளர்-போர்மேன் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டம்: உரிமையாளர்-போர்மேன் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி பாபநாசம் (வயது 40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 100-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று பட்டாசு ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த 2 அறைகளும் சேதமானது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

முழுமையாக தயாரிக்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூலப்பொருட்களில் ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நாரணபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் பாலாஜி பாபநாசம், போர்மேன் கணேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.