Police Department News

சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ் அவர்களின் அதிரடி நடவடிக்கைஅரசு மதுபானம் கள்ளத்தனமாக விற்பனை செய்த நபர் கைது

சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ் அவர்களின் அதிரடி நடவடிக்கை
அரசு மதுபானம் கள்ளத்தனமாக விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்க்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52), இவர் அதே பகுதியில் கள்ளத்தனமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவலாக கிடைத்தது.

இதையடுத்து சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது
விற்பனை செய்து கொண்டிருந்த இளங்கோவனை கையும் காலமாக பிடித்தனர்.

அவரிடம் இருந்து 227 மதுபாட்டல்கள் பறிமுதல் செய்தனர். விற்பனை செய்த இளங்கோவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.