Police Department News

சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி

சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி

காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்து வரும் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான முதலாம் ஆண்டு தேசிய அளவிலான ஃபிடே செஸ் போட்டியின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. காரைக்குடி பெரியார் சிலை அருகில் தொடங்கிய பேரணிக்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் தலைமை தாங்கினார்.போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி தொடங்கி வைத்தார்.

இயக்குனர் கோபால் முன்னிலை வகித்தார்.தேவர் சிலை வரை நடைபெற்ற இப்பேரணியில் நூற்றுக்கணக்கான பார்வைத்திறன் குறைபாடுள்ள செஸ் வீரர், வீராங்கனைகள், விவசாய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்திச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.