நடந்துவரும் நிகழ்வுகள் காவல்துறையை வசைபாடியும் ஏளனம் செய்துவருகின்றனர்.
கொரோனா தாக்கத்தினால் காவல் துறையில் இரவு பகலாக பணியாற்றிவரும் காலகட்டத்தில் பல இன்னல்களையும், ஏச்சும்,பேச்சும் இன்னும் எத்தனை எத்தனை.
இந்த சூழ்நிலையில் சேலம்.
முன்னாள் எம்.பி காவல்துறையுடன் தகராறு .
சேலத்தில் வசிக்கும் முன்னாள் எம்பி அர்ஜுனன் இரவு ஓமலூர் சென்றுவிட்டு சுங்கச்சாவடி அருகே வந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டனர்.
கோபமடைந்த அர்ஜுனன் போலீசாருடன் வாய் தகராறில் ஈடுபட்டார்.
சேலம் பகுதியில் வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் மாவட்ட எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் மருத்துவத் துறையுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
புதிய அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே சேலம் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓமலூரில் பணியை முடித்துக்கொண்டு முன்னாள் எம்பி அர்ஜுனன் அவர்கள் ஓமலூர் டோல்கேட் வந்தடைந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியிலும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த வழியே வரும் வாகனத்தை சோதனை செய்து அனுப்பி வைத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் எம்பியும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினருமான அர்ஜுனனின் வாகனம் டோல்கேட் அருகே வந்தது.
அப்போது காவல்துறையினர் உரிய ஆவணங்கள் இருக்கின்றனவா உங்களின் அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி கேட்டுள்ளனர்.
இதனை அடுத்து அர்ஜுனன் அவர்கள் நான் யார் தெரியுமா என்னை தெரியாமல் ஏன் நீ இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக அவர் காரில் இருந்து இறங்கி காவல்துறையினருடன் தகாத கெட்ட வார்த்தைகள் பேசி தரக்குறைவான வார்த்தைகளை பேசி காவல்துறையினரை வசைபாடினார்.
ஒருகட்டத்தில் அர்ஜுனன் காவல் சார்பு ஆய்வாளரை செருப்பு காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதைக்கண்ட சககாவலர்கள் தடுத்து நிறுத்தியும் பலனில்லை.
இதனையடுத்து காவல்துறையினருக்கும் அர்ஜுனன் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
பணியிலிருந்த காவல் துறையினரை தாக்கியது மிகவும் ஒழுக்ககேடான செயல் என்று பலரின் கருத்தாகவுள்ளது.
Police E News செய்திகளுக்காக
VRK.ஜெயராமன் MA,Mphil மாநில செய்தியாளர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்.