Police Department News

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

காரிமங்கலம் அருகே உள்ள மருளுகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் மேகநாத் (வயது23). கூலித்தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலத்தில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மொரப்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேகநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று மேகநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் காரிமங்கலம் அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (78) விவசாயி. இவர் அப்பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் செல்லப்பன் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.