Police Department News

பொம்மிடி அருகே இளம் பெண்மாயம் .

பொம்மிடி அருகே இளம் பெண்மாயம் .

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி .இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 23). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார், இந்த நிலையில் கடந்த 8 -ந் தேதி உடல்நிலை சரியில்லை என்று அதனால் பொம்முடி வரை சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். ஆனால் மீண்டும் அவர் வீடு திரும்ப வரவில்லை. இதனால் பதறிப்போன முனுசாமி மனைவியைப் பல இடங்களில் தேடிப் பார்த்தனர் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் தமிழ்ச்செல்வி மாயமானது தெரியவந்தது. இது குறித்து முனுசாமி பொம்மிடி போலீஸ் நிலையத்தில் அதே பகுதியில் உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் விக்னேஷ் என்பவர் தனது மனைவியை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.