Police Recruitment

பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் குளித்த சிறுவன் உயிர் இழப்பு

பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் குளித்த சிறுவன் உயிர் இழப்பு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி ராஜேஸ்வரி தம்பதியர் அவர்களது மகன் கவியரசன் வயது 10 மாக்கனூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாதலால் நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வயல்வெளியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றவர் கிணற்றில் மூழ்கி இறந்து விட்டார் உடன் சென்ற சிறுவர்கள் பதற்றத்துடன் விரைந்து வந்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர் உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறைக்கும் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்க்கும் தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த பாலக்கோடு தீயணைப்பு துறையினர் கிணற்றில் பலியான சிறுவனை மீட்டு உடனடியாக சடலத்தை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.