Police Recruitment

வியாபாரி-வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை

வியாபாரி-வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை

மதுரை சுப்பிரமணிய புரம் 1-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (வயது25). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். மேலும் வியா பாரத்தை அதிகப்படுத்து வதற்காக வேன் வாங்க விரும்பியுள்ளார். இதற்காக அவர் தாயிடம் வேன் வாங்கி தரும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டார்.

இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாய் விஜயா ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காய்கறி வியாபாரி ராஜ் குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் அழகுராஜ் (30). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. திருமணமாகவில்லை. இதனால் மன உளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கீரைத்துரை போலீசில் தாய் செல்லபாப்பு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாநகர் யாகப்பா நகர் பாலாஜி நகர் முதல் தெருவைசேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி லிங்கேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லிங்கேஸ்வரன் மகன் ராமச்சந்திர பூபதி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.