Police Recruitment

இன்று தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இன்று தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர் இதில் அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மேலும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் பேசுகையில் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தவறான போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் உரிய முறையில் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கினார். மேலும் தருமபுரி மாவட்டத்தை போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் படித்த இளைஞர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.மகாலட்சுமி, பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சிந்து அவர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்..
இறுதியாக போதை பழக்கத்திற்கு எதிராக
உறுதிமொழி ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.