Police Recruitment

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது

மதுரை செல்லூர் பாரதி தெரு ஜீவா ரோடு பழனி வேல் மகன் பூபதி ராகவேந்திரன். இவர் வழிப்பறி உள் பட்ட பல்வேறு குற்ற சம்ப வங்களில் தொடர்ந்து ஈடு பட்டு வந்தார். இதனால் இவருடைய குற்ற செயல் களை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் உத்தரவின்பேரில் போலீசார் பூபதி ராகவேந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

வாகைகுளம் பனங்காடி தென்றல் நகர் நீலச்சந்திரன் மகன் பார்த்தசாரதி 21. இவர் கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை ஈடு பட்டு வந்தார். தொடர்ந்து இவர் இந்தச்செயலில் ஈடுபட்டு வந்ததால் இவரை யும் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

பி.டி.ஆர். மெயின் ரோடு இந்திரா நகரை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ்குமார் என்ற குட்டீஸ். இவர் கொலை முயற்சி வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரும் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் இவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர் .மதுரையில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.