Police Recruitment

புதுர்மாரியம்மன் கோயில் தெருவில் காதலியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் வாலிபர் விரக்தியில் மாயம்.

புதுர்மாரியம்மன் கோயில் தெருவில் காதலியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் வாலிபர் விரக்தியில் மாயம்.

தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு புதுர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விவசாயி முருகன் இவரது மகன் சக்திவேல் (வயது. 23) முதுகலை பட்டதாரியான இவர் பாலக்கோடு அருகே உள்ள ஆத்துக்கொட்டாய் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்னை காதலித்து வந்தார்,
இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஆத்துக்கொட்டாயில் உள்ள பெண் வீட்டிற்க்கு சென்று பெண் கேட்டுள்ளனர்.
பெண் கொடுக்க தந்தை மறுத்ததால் விரக்தியில் வீட்டிற்க்கு திரும்பி வந்த சக்திவேல் அன்று முழுவதும் விரக்தியில் காணப்பட்டார்,
அன்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகனை கண்டு பிடித்த தரக்கோரி தந்தை பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார்,
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.