Police Recruitment

காவாப்பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற கூலி தொழிலாளி கைது .

காவாப்பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற கூலி தொழிலாளி கைது .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டியில் வீட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவரை பிடித்து விசாரித்ததில் கன்னியப்பன் (வயது. 40) என்பதும் வீட்டில் வைத்து அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது,
அவரை கைது செய்த பாலக்கோடு போலீசார் அவரிடமிருந்து 25 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.