Police Recruitment

பெசண்ட் அன்னை வேளாங்கண்ணி கொடியேற்று விழாவில் காவல்துறையினோரோடு இணைந்து பணியாற்றிய RCC Blue waves ch TN .

பெசண்ட் அன்னை வேளாங்கண்ணி கொடியேற்று விழாவில் காவல்துறையினோரோடு இணைந்து பணியாற்றிய RCC Blue waves ch TN .

29.08.2023 இன்று
சென்னை பெருநகர காவல் ஆணையர் மதிப்பிற்குரிய திரு.சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் ஆணைக்கிணங்க J2 அடையாறு காவல் உதவி ஆணையர் திரு.பொன்கார்த்திக் மேற்பார்வையில் காவல்துறையினோரோடு இணைந்து
சமூக ஆர்வலர்களான பெசண்ட் நகர் திரு.கோபி, President (RCC Blue waves chTn.) மற்றும் அடையாறு வியாபாரிகள் சங்கம் சார்பாக காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் நீர்,மோர், இளநீர், தர்பூசணி,பழரசம், தண்ணீர் பாட்டில்,மதிய உணவு போன்றவைகளை வழங்கினர்.
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தளத்தில் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. இந்த கொடியேற்றி விழாவில் சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தாரை தாரையாக பாதணி அணியாமல் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் பட்சத்தில் பக்தர்கள் பயன் பெறும் வகையில் சென்னை அடையாறு மாவட்டம் காவல்துறையினர் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர் அது மட்டுமன்றி தண்ணீர் பாட்டில் மோர் உணவு பொட்டலங்கள் வழங்கியும் மற்றும் பலவிதமான உதவிகளை செய்தனர். மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் எவ்வித சிரமமின்றி போக்குவரத்துக் காவல் துறையினர் மிகவும் சிறப்பாக பொதுமக்கள் செல்ல வழிவகுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.