Police Department News

காரில் 51 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது

காரில் 51 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது

மதுரை கரிமேடு போலீசார் அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துசென்றனர். அப்போது கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக கார் ஒன்று இருப்பதை கண்டனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற போது காரிலிருந்து 4 பேர் தப்பி செல்ல முயன்றனர்.அவர்களை பிடித்து விசாரித்த போது மதுரை அச்சம்பத்தை சேர்ந்த கண்ணதாஸன் வயது 36 தத்தனேரி பிரகாஷ்ராஜ் வயது 28 பாலகுரு வயது 31 மற்றும் தப்பி சென்றவர் K.K நகரை சேர்ந்த குமார் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் காரில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பது தெரியவந்தது அதை தொடர்ந்து கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர் மேலும் காரிலிருந்து 51 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.