Police Department News

சந்தேகத்தின் பேரில் போலிஸ் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்ட நபர் மனித உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட செயல் பலரையும் பதற வைத்திருக்கிறது.

சந்தேகத்தின் பேரில் போலிஸ் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்ட நபர் மனித உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட செயல் பலரையும் பதற வைத்திருக்கிறது.

இதுபற்றி போலிஸ்ட் தரப்பில் தெரித்திருப்பதாவது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு மகாராஜபுரத்தைச் சேர்ந்த அசோக்ராஜன் என்ற 27 வயது இளைஞர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த அசோக் ராஜன் கடந்த 13ஆம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாகத் தன்னுடைய பாட்டி பத்மினியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய நிலையில்அவர் சென்னைக்கு செல்லவில்லை.

அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவரது பாட்டி பத்மினி அப்பகுதி போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கில் கும்பகோணம் சோழப்புரத்தை சேர்ந்த நாட்டு வைத்தியரான கேசவமூர்த்தியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர் போலீசார். முதலில் எதுவும் தெரியாது என சாதித்த கேசவமூர்த்திக்கு பரிசு கொடுத்து கவனித்தது போலிஸ்.

ஆண்மைக் குறைவுக்காக அசோக் தன்னிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த போது அவர் மறுத்ததாகவும் தெரிவித்தார் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. மேலும் தனது ஆசைக்கு இணங்க மறுத்த அசோக் ராஜனுக்கு ஆண்மை வீரியத்துக்கான மருந்தை அதிகமாக கொடுத்து அவரை தனது ஆசைக்கு பயன்படுத்தியுள்ளா£. இதனால் நிலைகுலைந்த அசோக்கை பிறப்பு உறுப்பை வெட்டி கொலை செய்து பின்னர் அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டை சுற்றி புதைத்ததாக தெரிவித்தார்.

ஆகவே அவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டை சுற்றி தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதில் ஏராளமான எலும்புக்கூடுகள் சிக்கின. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அசோக்கை துண்டு துண்டாக வெட்டி அவரது இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டதாகவும் மேலும் தான் வளர்க்கும் நாய்க்கும் அவற்றை பரிமாறியதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட போலீசார் உறைந்து போயினர்.

அதுமட்டுமின்றி தங்க சங்கிலியுடன் ஒரு எலும்புக்கூடு கிடைத்தது. அதுகுறித்த விசாரணையில் கடந்த ஆண்டு அனஸ் என்ற இஸ்லாமிய இளைஞரை வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இரண்டு பேரின் உடல்களையும் என்ன செய்வது என்று தெரியாமல் வெட்டி வீட்டிலேயே புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டை கட்டுப்பாட்டில் எடுத்துள்ள காவல்துறையினர் வீட்டை சுற்றிலும் புதைக்கப்பட்டுள்ள எலும்புகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் வேறு யாரேனும் கேசவ மூர்த்தியால் கொல்லப்பட்டுள்ளார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.