Police Department News

சிறந்த புலனாயிவிற்காக மதுரை ஒத்தக்கடை போலீசாருக்கு பரிசு

சிறந்த புலனாயிவிற்காக மதுரை ஒத்தக்கடை போலீசாருக்கு பரிசு

சென்னையில் தமிழக அளவில் போலீசாருக்கான பல்திறன் போட்டிகள் நடந்தன, இதில் மதுரை ஒத்தக்கடை போலீசார் 2 கொலை வழக்குகளில் அறிவியல் தொழில் நுட்ப்பத்தை பயன்படுத்தி கொலையாளியை கைது செய்ததற்காக மாநில அளவில் 2ம் இடத்தை பெற்றனர்.

சில மாதங்களுக்கு முன் மதுரை ஒத்தக்கடை பகுதியில் 78 வயதான மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார், சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொலையாளியை போலீசார் கைது செய்தனர் தமிழக அளவில் சிறந்த தொழில் நுட்ப வழக்கு என 2 ம் இடத்தை பிடித்தது

விசாரணை அதிகாரி ஆய்வாளர் செந்தாமரை கண்ணன் அவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதி கோவில் காவலாளி 2015 ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும் 8 ஆண்டுகளுக்கு பிறகு தொழில் நுட்ப முறையில் கொலையாளி கைது செய்யப்பட்டார் இதற்காக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி., சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பரிசு, சான்றிதழை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வழங்வுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.