சென்னையில் காவலன் செயலி மூலம் நீதிமன்ற பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில், அவரிடம் தகராறில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்த இறுதியாண்டு மாணவர்கள் அருள்குமார், ஆனந்தராஜ் மற்றும் பொன்மணிமாறன் ஆகியோர் பிராட்வேயில் இருந்து கோயம்பேடு செல்லும் 15 ஜி பேருந்தில் ஏறியுள்ளனர். மதுபோதையில் இருந்த மூவரும், பேருந்திலிருந்த பெண் ஒருவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது செல்போனில் இருந்த காவலன் செயலி மூலம் அந்த பெண் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலளித்துள்ளார். அங்கிருந்து அருகிலுள்ள பூக்கடை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், அடுத்த சில நிமிடங்களில் விரைந்து சென்ற போலீசார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் வைத்து இளைஞர்கள் மூவரையும் கைது செய்தனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.