Police Department News

காரியாபட்டி அருகே CEOA கல்லூரியில் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் பற்றியும் சட்ட விழிப்புணர்வு பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் சார்பு ஆய்வாளர் அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

காரியாபட்டி அருகே CEOA கல்லூரியில் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் பற்றியும் சட்ட விழிப்புணர்வு பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் சார்பு ஆய்வாளர் அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள CEOA கல்லூரியில் காரியாபட்டி காவல்துறை சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பெண் கல்வி சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் அசோக்குமார் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு பெண் கல்வி அவசியம், குழந்தை திருமணம் தடுப்பு , சமுதாய வாழ்க்கை முறை, பெண் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் அதிலிருந்து காத்துக் கொள்ள சட்ட பாதுகாப்பு பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். முன்னதாக மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் கூறினார். அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயலட்சுமி அவர்கள் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசினார் . கல்லூரி தாளாளர் சந்தோஷ் குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published.