![](https://policeenews.com/wp-content/uploads/2024/02/1000062798.jpg)
: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் இறுதி நாளான நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் லதா மாதவன் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுதும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர்.
இப்பேரணியை மதுரை வருவாய் கோட்டாச்சியர் சாலினி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர்.திருமலைகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் சித்ரா சிங்காரவேலு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன் முரளி போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் ஜெய்சிங் மற்றும் சோபனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணி காந்தி மியூசியத்தில் துவங்கி தமிழ் சங்கம் மாவட்ட நீதிமன்றம் வழியாக மதுரை மைய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது.
![](http://policeenews.com/wp-content/uploads/2024/02/Screenshot_20210920-193209_Photo-Par-Tamil-Likhe-1-1-612x1024.jpg)