Police Department News

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று முன்தினம் ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலை அருகே உள்ள பூங்காவில் ஓட்டேரி போலீசார் சந்தேகத்தின் பேரில் 4 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர்களிடம் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (23), சசிகுமார் (27), கிஷோர் (24), சாமுவேல் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து புளியந்தோப்பு பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.