Police Department News

மது பாட்டில்கள் விற்ற இருவர் மீது வழக்கு

மது பாட்டில்கள் விற்ற இருவர் மீது வழக்கு

டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா மற்றும் மதுரை வடக்கு மாவட்ட மேலாளர் ஆகியோரின் உத்தரவின் படி மேலூர் பகுதியில் வட்டாட்சியர் மற்றும் பறக்கும் படை அலுவலர் முருகன் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினருடன் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலூர் நகர் மற்றும் தும்பை பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சோதனையில் மேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்.டேவிட் ரவி ராஜன் துணை வட்டாட்சியர் வேலு டாஸ்மாக் பணியாளர் சங்கையா பாண்டியன் மற்றும் காவல் துறையினர் பங்கு பெற்றனர். சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என மதுரை வடக்கு மாவட்ட மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.