Police Recruitment

மதுரையில் ஆயுதங்களுடன் மோதி கொண்ட இருவர் கைது

மதுரையில் ஆயுதங்களுடன் மோதி கொண்ட இருவர் கைது

மதுரையில் முன் விரோதத்தில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட இருவரை போலீசார் திங்கட்கிழமை கைது செய்தனர். மதுரை தெற்கு வாசல் காஜா தெருவை சேர்ந்தவர் பாண்டி வயது (31) வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கரடிப்பாண்டி வயது (44 )இவர்கள் இருவருக்கும் காஜா தெருவில் விநாயகர் சிலை வைத்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் கத்தியால் ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.