Police Recruitment

புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது

புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது

மதுரை தத்தனேரி எம்.ஜி.ஆர் தெருவில் பெட்டி கடையில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில் தத்தனேரி எம் ஜிஆர் தெருவில் பெட்டிக்கடை முன்பாக பண்டல்களாக வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடையில் இருந்த 3 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி வயது (65) என்பவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.