Police Recruitment

காணாமல் போன 2 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்

காணாமல் போன 2 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் )13 வயது சிறுமி தனது சித்தியின் 8 வயது மகளுடன் சேர்ந்து வெளியெ சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் துறையினர் சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன் சிறுமியின் செல்போன் சிக்னலை கண்காணித்ததில் பெருங்குளத்தூர் வழியாக இரயிலில் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இரயிலில் பயணித்த திருநங்கை ஒருவர் காணாமல் போன 2 சிறுமிகள் இரயிலில் இருப்பதை பார்த்து கோட்டூர்புரம் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து சென்ற கோட்டூர்புரம் காவல்துறையினர் 2 சிறுமிகளையும் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்

Leave a Reply

Your email address will not be published.