Police Recruitment

உசிலம்பட்டியில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது

உசிலம்பட்டியில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புறங்களில் வசிக்கும் முதியோர்கள், தங்களது முதியோர் பென்ஷன், 100 நாள் வேலைக்கான ஊதியத் தொகைஎன தங்களது வங்கிக் கணக்கில் உள்ள தொகையை எடுக்க உசிலம்பட்டி நகர் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்காக தினசரி நூற்றுக்கணக்கான முதியோர்கள் பணம் எடுக்க வருகை தருகின்றனர்.—————-ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் அருகில் இருப்பவர்களிடம் உதவியை முதியோர்கள் நாடி பணம் எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளதை அறிந்த அவர்களுக்கு உதவுவது போல நடித்தும் ஏடிஎம் கார்டை மாற்றியும் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் அவ்வாறு கடந்த ஐந்தாம் தேதி தொட்டப்பநாயக்கணூரைச்சேர்ந்த பசுபதி என்ற முதியவரிடமிருந்து28ஆயிரமும், கடந்த எட்டாம் தேதி, குருவிளாம்பட்டியைச்சேர்ந்த முத்தையா என்ற முதியவரிடமிருந்து21,400ரூபாயும் கொள்ளையடித்துச் சென்றது உசிலம்பட்டியில் பரபரப்பைஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த சங்கர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி அரங்கேரி வந்ததும், பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்குகள் பதிவாகி தேடப்பட்டு வரும் குற்றவாளி என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.