Police Recruitment

துணிக் கடையில் நூதனமான முறையில் ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது

துணிக் கடையில் நூதனமான முறையில் ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது

தருமபுரி பஸ் நிலையம் அதைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி ரெடிமேட் கடைகளில் தொடர்ந்து செல்போன்கள் மற்றும் பொருட்கள் களவு போவதாக தருமபுரி மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து வந்த பல்வேறு புகார்களை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி நகர போலீசார் வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தருமபுரியில் உள்ள மென்ஸ் வேர் என்னும் ரெடிமேட் கடையில் கடந்த 16-ம் தேதி அந்தக் கடைக்கு வந்த 2 பெண்கள் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் துணி வகைகளை நூதனமான முறையில் திருடி சென்று தப்பியோடி விட்டனர். இதுகுறித்து கடையில் உரிமையாளர் தருமபுரி நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததில் தொடர்ந்து தருமபுரி நகர போலீசார் அந்தக் கடையிலும், அப்பகுதியிலும் பதிவாகியிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வந்த நிலையில் தருமபுரி நகரில் சுற்றித்திரிந்த 2 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது

விசாரணையில் இருவரும் சுமதி, சுஜாதா, என்பதும், அவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் பெண்கள் இருவரும் வேறு எங்காவது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என பல கோணத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா காலங்களில் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்துள்ள வணிக நிறுவனங்களில், இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் சாதாரண நாட்களிலும் தருமபுரி நகரில் நூதன வகையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.