Police Department News

அரசுப்பேருந்தில் தவறவிடப்பட்ட பத்து சவரன் நகையை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணிமனை காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அரசுப்பேருந்தில் தவறவிடப்பட்ட பத்து சவரன் நகையை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணிமனை காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சேரன் மகாதேவி பணிமனையில் அரசுப்பேருந்தை நிறுத்தும்போது, வழக்கம் போல் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரு பையில் 10 சவரன் நகை கேட்பாரற்று கிடந்தது. உடனடியாக அந்த பையினை அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பணிமனை காவலாளி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சேரன் மகா தேவி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த நபர் தவறவிட்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் அந்த பை ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேர்மையாக செயல்பட்ட மூன்று பேருக்கும் சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்

Leave a Reply

Your email address will not be published.