Police Department News

தமிழ்நாடு காவல்துறையினர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற மதுரை மாநகர் காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்

தமிழ்நாடு காவல்துறையினர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற மதுரை மாநகர் காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்

தமிழ்நாடு காவல்துறையினருக்கான 2024-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கிசுடும் போட்டிகள் 26.09.2024 முதல் 28.09.2024 வரை காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டிவாக்கம் பகுதியில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல துப்பாக்கி சுடும் ஆண்கள் அணி தங்கம்-3, வெண்கலம்-2, வெள்ளி-2 பதக்கங்களும் மொத்தம் 7 பதக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் 2,3 ஆம் இடத்திற்கான 2 கேடயங்களை பெற்றுள்ளது. இன்று தென்மண்டல துப்பாக்கி சுடும் பிரிவில், மதுரை மாநகர காவல்துறை சார்பாக பங்கேற்ற காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.