
மதுரையில் போக்சோ வழக்கில் 24 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்த மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம்
கடந்த 04/01/2023 அன்று மதுரை மாநகரம் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவரது மகன் கூல் சேர்வை வயது 27 என்பவர் மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வழக்கின் சாட்சிகள் விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் சாட்சிகள் விசாரணையில் எதிரி கூல் சேர்வை என்பவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானதால் எதிரிக்கு இவ்வழக்கில் 24 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்தும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரூபாய் ஆறு லட்சம் எழுப்பீட்டுத் தொகை வழங்கவும் மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி திரு முத்துக்குமார வேல் அவர்கள் உத்தரவிட்டார்கள்
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய போலீசாரை மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
