
மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு முதலுதவி அளித்து ஹோமில் சேர்த்த காவல் கரங்கள்
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த திருமதி.சுல்தான் பேகம் 33/25, என்ற பெண்ணை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து, நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளர் உதவியுடன் மேற்படி மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்காக NEW CREATION ஹோமில் சேர்த்து உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய காவல் ஆணையர் அவர்கள் மற்றும் காவல் கரங்கள் அமைப்பை சேர்ந்த காவலர்களின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
