மனித நேயம் காக்கும் மகத்தான சேவை தஞ்சை காவல்துறை.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் – சின்ன கருப்பூர் பகுதியை சார்ந்த திருமதி . ரேகா (45), [கணவர் பெயர் திரு. சுவாமிநாதன்] ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த ஒரு மாதமாக மருந்து இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் Thanjavur District Police Facebook page மூலமாக அறிந்த கும்பகோணம் போலீசார் அனுமதி சீட்டுடன் வாகனம் ஏற்பாடு செய்து, அவர்களை ஊர் காவல் படையை சேர்ந்த காவலர் ஒருவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனை அழைத்து சென்று மருந்து வாங்கி பாதுகாப்பாக திரும்ப அழைத்து வந்தார்.
உதவி செய்த காவல்துறைக்கு தனது இரு கரம் தூக்கி நன்றியினை தெரிவித்தனர்.