
மதுரை ரயில் நிலையத்தில் பணிக்கு ரயிவே போலீஸார் மருத்துவ உதவி
இன்று 07.08.2025 அன்று, ரயில் எண் 16343, காலை 10.30 மணிக்கு நடைமேடை எண் 04 இல் வந்து சேர்ந்தது. அப்போது வெள்ளதுரை என்ற பயணி, வயது 55, த/பெ. சீனியப்பன் 2/172, மெயின் ரோடு, இனாம், கோவில்பட்டி, என்பவர் ஒட்டப்பாலத்திலிருந்து மதுரைக்கு பயணம் செய்தார், முன்பதிவு செய்யாத டிக்கெட் UMO எண் 68153898. திடிரென்று அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவ உதவியை நாடினார். அப்போது அங்கு வந்த உதவி ஆய்வாளர்கள் திரு. முரளி தாஸ் (வெடிகுண்டு கண்டறிதல் படை/ரயில்வே பாதுகாப்பு படை,) , திருமதி அணு எலிசபெத் ஜோசப், (இரயில்வே பாதுகாப்பு படை )மற்றும் நடைமேடையில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் மதுரை ஆகியோருடன் உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்து அந்தப் பயணிக்கு முதல் உதவி செய்து காப்பாற்றினார்கள், மேலும் மேல் சிகிச்சைக்காக அப்பயணியை ஆம்புலன்ஸ் 108 உதவியுடன் மதுரை இராசாசி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
