
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறையினர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் அலங்காநல்லூர் காவல் நிலையம் பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலைய குற்ற எண்: 69/2019 U/s 147,148,394(b),323,324,355,307,302,506(ii),IPC and TNPHW Act வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 1) கமல் பாண்டி (49) வடுகப்பட்டி2) செல்வ பாண்டி வடுகப்பட்டி ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ10,000 அபராதம் விதித்து IV th Additional District Session Court தீர்ப்பு வழங்கியது
அதன் பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் எதிரிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் திரு. செல்வம் மற்றும் நீதிமன்ற தலைமை பெண் காவலர் திருமதி. ரஞ்சிதம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
