
வெளிநாட்டவர்கள் தவறவிட்ட பாஸ்போர்ட்டை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய நபரை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர்.
2026 மார்ச் மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பாவெல் நோவக் லுயூவோகா மற்றும் அவரது மனைவி யூவேடா நோவகோவா ஆகியோர் தங்களது வெளிநாட்டு பாஸ்போர்ட்டை தவறவிட்டதாக மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் மதுரை வடக்காவணி மூல வீதியில் உள்ள மீனாட்சி காபி பார் கடையைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் கீழே கிடந்த பாஸ்போர்ட்டை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
வெளிநாட்டவரின் பாஸ்போர்ட்டை பாதுகாப்பாக எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவியாக இருந்த குமாரசாமி என்பவரின் நற்செயலை பாராட்டு விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் J லோகநாதன் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்




