Police Recruitment

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை

29.04.2019-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 07 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்து கொலை மிரட்டல் விடுத்த சதீஸ்குமார் (22/20), த/பெ.முருகன், மீனவர்காலனி, மண்டபம், இராமநாதபுரம் என்பவரை இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 05/2019 u/s 294(b), 363, 506(ii) IPC, 10, 9(m) of POCSO Act–ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று 31.01.2020-ம் தேதி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.P.பகவதியம்மாள் அவர்கள் மேற்படி எதிரியான சதீஸ்குமார் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 5,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.