காஞ்சிபுரம்: காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் காவல் உதவி-ஆய்வாளர் செந்தில்வேல் மற்றும் காவல்துறையினர்ூ தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மரக்காணம் பகுதியை சேர்ந்த சுதாகர் (31) ஆனந்த்(23) மற்றும் பாண்டியன் (25) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கிராமத்தில் உள்ள திருவாலீஸ்வரர் கோவில் உண்டிலை உடைக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடி உள்ளனர் என்பது தெரியவந்தது.
காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். சுதாகர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக தெரிவித்தனர்.
ஸ்டவ் மற்றும் குடை ரிப்பேர் செய்பவர் போல ஊருக்குள் வந்து நோட்டமிட்டு திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.