மக்களை சிரமப்படுத்தாமல்¸சிறப்பாக செயல்படுங்கள் – முதல்வர் பதக்கம் வழங்கி இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. c.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் பேச்சு
இன்று 12.02.2020-ம் தேதியன்று சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பதங்களை இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அதில் பொதுமக்கள் கொடுக்கின்ற புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை சிரமத்திற்கு ஆளாக்காமல் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்துக்கொள்ளவும்¸ விபத்துகளையும், குற்றங்களையும் தவிர்த்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இரயில் நிலையங்களில் அமைந்துள்ள கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்படி அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கிடவும்¸ காணாமல் போன குழந்தைகள்¸ சிறுவர்¸ சிறுமியர்¸ பெண்கள்¸ வயது முதிர்ந்தவர்கள் ஆகியோர் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்திடவும்¸ ஆதரவற்றோர்களை மீட்டு அவர்களை காப்பகத்தில் சேர்த்திடவும்¸மேலும் இரயிலில் பயணம் செய்யும்போது¸ தவறவிடப்