ZOOM CLOUD பயன்பாட்டு தளம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த காவல் கண்காணிப்பாளர்.
கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை தொடர்ந்து காவல்துறை துணைத்தலைவர் தஞ்சாவூர் சரகம் அவர்களது உத்தரவுப்படி மாணவ, மாணவிகள் அவர்களின் அனுபவத்தை அவர்களது குடும்பத்தினருடன் பயனுள்ள வகையில் செலவிடுகிறார்கள் என்பதை வெளிக்கொணரும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.திரு.துரை. இ.கா.ப.¸ அவர்கள் தலைமையில் கடந்த 17.05.2020 தேதியன்று ZOOM CLOUD பயன்பாட்டு தளம் மூலம் பேச்சு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் ஜூனியர்/சீனியர் என 78 பேர் பங்கேற்றதில் 6 பேர் கொண்ட குழு நடுவர்களாக நியமிக்கப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களை 23.05.2020-ம் தேதியன்று மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். இப்போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு முதல் பரிசு ரூ.3000/-, இரண்டாம் பரிசு ரூ.2000/-, மூன்றாம் பரிசு ரூ.1000/-, மற்றும் சிறப்பு பரிசு தலா ரூ.500/-, வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் பங்குபெற்ற அனைவருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.