Police Department News

சிவகங்கையில் சினிமாவைப்போல ஓடஓட விரட்டி பத்தாம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை! – மக்களைப் பதற வைத்த `திக் திக்’ நிமிடங்கள்..!!

சிவகங்கையில் சினிமாவைப்போல ஓடஓட விரட்டி பத்தாம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை! – மக்களைப் பதற வைத்த `திக் திக்’ நிமிடங்கள்..!!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட வாணியங்குடியில் முன்விரோதம் காரணமாக கடந்த 26.05.2020 தேதியன்று 16 வயதுடைய ராஜேஸ் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்மந்தமாக நிலைய கு.எண்.751/2020 U/s.147,148,294(b),324,307,302IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோகித்நாதன் ராஜகோபால் அவர்களின் உத்தரவின் பேரிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல் துணைக்கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையிலும் சார்பு ஆய்வாளர்கள் திரு.ரஞ்சித்,திரு.பாண்டியன்,திரு.ராமச்சந்திரன் ஆகியோர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவவந்த நிலையில் சிவகங்கையை சேர்ந்த சேகர்,தயாநிதி,பாண்டித்துரை,தம்பி துரை,மருதுபாண்டி,வெற்றிவேல்,சரவணன் ஆகியோரை குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

ச.அரவிந்த்சாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published.