Police Department News

பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தவர்களை பிடித்த காவலருக்கு பாராட்டு

பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தவர்களை பிடித்த காவலருக்கு பாராட்டு

திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி காவல் நிலைய ரோந்து காவலர் திரு.மதன்குமார் மற்றும் திரு.மகேஸ்வரன் ஆகியோர் தோட்டத்து பாளையம் பகுதியில் ரோந்து பணியில் மேற்கொள்ளும்போது ஏ.பி.எஸ் அகாடமி ஸ்கூல் அருகிலுள்ள தங்கம் ஸ்விங் மிஷின் கம்பெனியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் என்பது தெரியவந்தது.அவர்கள் அந்த பகுதியில் உள்ள சரண்யா மளிகை கடை மற்றும் சுவிங் மிஷின் ஆகிய கடைகளை உடைத்து திருட முயற்சித்தது தெரியவந்தது.திருட முயன்ற இரு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்செயலை செய்த காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.