Police Department News

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி சமத்துவ புரம் பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு….

விருதுநகர் மாவட்டம்:-

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி சமத்துவ புரம் பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு….

நரிக்குடி யில் இருந்து திருப்புவனம் செல்லும் சாலையில் சமத்துவபுரம் பகுதியில் சாலையோரம் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

சாலையோரம் ஒருவர் சடலமாக கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் நரிக்குடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

மேலும், அருகில் உள்ள காவல் நிலையங்களில் இறந்தவரின் விபரங்கள் சேகரிப்பதற்காக புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், சடலத்தைக் கைப்பற்றிய நரிக்குடி காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சுழியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police e News செய்திகளுக்காக.
VRK.ஜெயராமன்MA,Mphil மாநிலசெய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.