Police Department News

அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்….

விருதுநகர் மாவட்டம்:-

அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்….

அருப்புக்கோட்டை சிங்காரத்தோப்பு பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பதுக்கிவைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பெருட்கள் பறிமுதல்.

பறிமுதல்செய்ப்பட்டபோது பாலாஜி மற்றும் மோகன் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரின்மீது வழக்குபதிவு செய்யப்பட்டது

இது குறித்து காவல் துறை வட்டாரத்தில் கேட்டறிந்தபோது

கடந்தசில நாட்களாக அருப்புக்கோட்டை நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது.

காவல் துறையினர் ரகசியகண்காணிப்பில் இருந்தநிலையில்

இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

துரிதமாக செயல்பட்ட நகர் ஆய்வாளர் பாலமுருகன் அவருடன் இருந்த சககாவலர்களையும் அவர்களின் நடவடிக்கைகுறித்து அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் வெகுவாகப்பாராட்டியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவுகாலத்தில் வாகனபோக்குவரத்து சரிவர இயங்காதநிலையிலும்
இவ்வளவு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிடிபட்டதால் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police E News செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநிலசெய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.