Police Department News

பல்கலை மாணவர் 4 பேர் கைது

டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள்புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போதைப்பொருள் தடுப்புப் படையினர் நடத்திய விசாரணையில் டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், இமாச்சலபிரதேசத்தில் இருந்து போதைப்பொருள்களை பெற்று இங்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

இந்நிலையில், இந்தப் போதைப்பொருள் விற்பனையில் தொடர்புடையதாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் அனிருத் மாத்தூர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் டென்சின், ஏமிதி பல்கலைக்கழக மாணவர் சாம் மாலிக், இந்து கல்லூரி மாணவர் கவுரவ் ஆகியோரை போதைப்பொருள் தடுப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.14 கிலோ கஞ்சா உள்ளிட்டவை  காவல் துறை  பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.