Police Department News

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட காவலர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள்கள்

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட காவலர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள்கள்
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் இ.கா.ப அவர்களின் வேண்டுகோளின்படி காவலர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் 08.07.2020 இன்று பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் ஊட்டச்சத்து உணவு பொருள்களான முட்டை, வெற்றிலை, மிளகு, பொட்டுக்கடலை, சீரகம் ஆகியவற்றுடன் கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டு பாதுகாப்பாக பணி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.