Police Department News

மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை. கொலை செய்த 11 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது

மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை. கொலை செய்த 11 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது

மதுரை மாவட்டம், அண்ணாநகர், E3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான , வைகை காலனியை சேர்ந்தவன் , செந்தூர்பாண்டி மகன் ஆனந்த் என்ற ஓட்டைப்பல் ஆனந்த், வயது 26, இவன் மீது மதுரை மாநகரில் பல கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன, குறிப்பாக கடந்த 2012 ம் ஆண்டு அண்ணாநகர் பகுதியில் 50 ரூபாயிக்காக இரவுப் பணியில் இருந்த பாதுகாவலரை கொடூரமாக அடித்து கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு இருக்க, இந்த மாதம் 19 ம்தேதியன்று வண்டியூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கத்தின் பின்புறம் கருவேல முட்புதரில் ரவுடி ஓட்டைப் பல் ஆனந்தன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது,
தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆனந்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் சம்பவத்தன்று, ஓட்டப் பல் ஆனந்த், மருது, குமார் ஆகாய மூவரும் கருவேல முட்புதர் காட்டுக்குள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருக்கும் போது, அங்கு ஆனந்துக்கு வேண்டாதவர்கள் கோபால், மாரிசெல்வம், சமயன் கோவில் தெரு விக்கி, மூர்த்தி, பாலா, யாகப்பநகர் விக்கி மற்றும் பலர் ஆக 11 நபர் கொண்ட கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் அங்கே வந்து மருது, குமார் ஆகியோரை பார்த்து நாங்கள் ஆனந்தை போடப் போரோம், நீங்கள் இங்கிருந்து ஓடி விடுங்கள் என கூறியுள்ளனர்,
குமார் , மருது ஆகியோர் பயந்து ஓடி பக்கத்தில் இருந்த முட்புதரில் அருகே உட்கார்ந்திருந்தார்கள், சிறிது நேரத்தில் ஓட்டப் பல் ஆனந்தை அவர்கள் அனைவரும் சேர்ந்து வாள், அருவாள், கத்தியால் சரமாரியாக தலை, கை கால் உடம்பில் வெட்டி, குத்தியதை பார்த்து பயத்தில் செய்வதறியாது திகைத்து திகைத்து நின்றனர். பின் அவர்களை பார்த்து கும்பல் நீங்கள் இன்னும் ஓட வில்லையா அவங்களையும் வெட்டுங்கடா என கூறிக் கொண்டே விரட்டியது, இதனால் பயந்து போய் ஓடி வந்து ஆனந்தின் அப்பா, மற்றும் அண்ணனிடம் சம்பவத்தை கூறினர்
அதன் பின் ஆனந்தனின் அண்ணன் வாசுதேவன் காவல் நிலையம் வந்து தன் தம்பியை வெட்டிக் கொன்றவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையின் காவல் ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் ரீகன் அவர்கள் IPC 147, 148, 342, 307, 302 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி அதன் பின் நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.